Thursday, February 7, 2008

முத்தம்

குழந்தையின் உதடுகளில்
எறும்பு கடித்தது போன்ற
பழுத்த உதடுகள் உனக்கு
இதழ் குவித்துப் பேசுகையில்
இதழ்களின் பாதைகளில்
பயணப்படும் என் மனது
இதழ்களின் இடைவெளியில்
இறுக்கப் பட்டிருந்தது
என் உயிர் மூச்சு
இன்னும் கனத்துக் கிடக்கிறது
நெஞ்சில்...
விட்டுப் பிரிகையில்
வெகு கவனமாக
எச்சில் படாமல்
நீ கொடுத்த
அந்த சம்பிரதாய முத்தம்
-ஜெ.நம்பிராஜன்

No comments: