Saturday, August 7, 2010

தன்னிலை உணர்தல்

• பிச்சையெடுக்கிறது...மரம் சுமக்கிறது
வித்தை காட்டுகிறது
மண்டியிடுகிறது...ஆசீர்வதிக்கிறது
பழக்க பலதும் செய்கிறது
• சிறு சங்கிலியில் பிணைக்கப்படுகிறது
தார்க்குச்சியால் குத்தப்படுகிறது
அளவுச்சாப்பாடு உருட்டித்தின்கிறது
• தன்னிலை உணர்ந்து ஓர்நாள்
விட்டு விடுதலை ஆகிறது
அடிமைப்படுத்தியவன் சொல்கிறான்,
"அதற்குப் மனநிலை பிறண்டு விட்டது"
-ஜெ.நம்பிராஜன்

No comments: