Tuesday, November 20, 2007

நந்திகிராமம்

செய்தி
'பரபரப்பான சூழ்நிலையில்
பாராளுமன்ற கூட்டத்தொடர்'
'சட்டசபையில் எதிர்க்கட்சிகள்
கூண்டோடு வெளியேற்றம்'
போன்றே அன்றாட செய்திகளில்
ஒன்றாகி விட்டன
நந்திகிராம படுகொலைகளும்.
எங்கள் கவலை
அரசி சாக கிடக்கிறாள்
அபியோ கோமாவில் இருக்கிறாள்
அஞ்சலி வேறு சிறையில் இருக்கிறாள்
எங்களுக்கு இப்படி ஆயிரம் கவலைகள்
யாருக்கய்யா நேரமிருக்கிறது
நந்திகிராமம் பற்றியெல்லாம் கவலைப்பட.
சிவப்பு கம்பளம்
சிவப்பு கொடி மாறியது
சிவப்பு கம்பளமாக
பெரு முதலாளிகளுக்கு.

No comments: