Saturday, July 12, 2008

முத்தத்தின் நிறைகுடம் - துளி 1

எனது முதல் கவிதைத்தொகுப்பு 'முத்தத்தின் நிறைகுடம்' நூலிலிருந்து கவிதைகள் தொடராக பாவெளியில் வெளிவரும். முதல் பகுதி இங்கே...

  • உன் மேல் உதடு சூரியன்...
    கீழ் உதடு சந்திரன்
    ஒரே முத்தத்தில்
    உருக வைக்கும் வெயிலையும்
    உறைய வைக்கும் பனியையும்
    என் மேல் செலுத்துகிறாய்.
  • நீ விவசாயி
    நான் விளைநிலம்
    என்னுள் மோகத்தை விதைத்து
    முத்தத்தை அறுவடை செய்கிறாய்.
  • உன் ஒவ்வொரு முத்தமும்
    ஓர் முள்
    அதை...
    மறு முத்தத்தால் தான்
    எடுக்க வேண்டும்.
  • உன் இதழ் தேனடை
    அதில் தேனெடுக்கும் போது மட்டுமே
    தேனீக்கள் கொட்டுவதில்லை.
  • எத்தனை முறை குடித்தாலும்
    தீராத மதுப்புட்டி
    உன் இதழ்
    எவ்வளவு குடித்தாலும்
    ஆசை அடங்காத பெருங்குடிகாரன்
    நான்.

முத்தத்தின் நிறைகுடம்

ஜெ.நம்பிராஜன்

வெளியீடு: ஜெயஸ்ரீ பதிப்பகம்

1 comment:

Ravishna said...

yea, Your "Muththathin Niraikudam" is too nice.I like it.keep writing this....If you have time,Please visit my blogspot also,
ravishna.blogspot.com


Regards,
Ravishna