Sunday, June 15, 2008

நாளை...?

  • ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில்
    முந்தைய நாளின் கனத்த நினைவுகள்
    இமைகளின் மேலே அமர்ந்து கொள்கின்றன
  • சன்னல் திரையை விலக்கினால்
    முகத்திலடிக்கும் சூரிய ஒளியில்...
    பொட்டல் வெளியும் ஒற்றைப் பனையும்
  • எதிரில் தென்படும் மனிதர்களின்
    முகங்களிலும் வெறுமை
    மண்டிக் கிடக்கிறது
  • தூரத்து வானத்தைப் பார்த்தபடி
    நேரத்தை ஓட்டுவது எப்படி?
    இரவு எப்போது வரும்
  • இரவினில் இமையை மூடாமற்தடுக்கும்
    சிந்தனைத் தூசொன்று...
    நாளையையும் இவ்வாறே நகர்த்தியாக வேண்டும்
    -ஜெ.நம்பிராஜன்
    சமர்ப்பணம்:
    சிதைந்த வாழ்வுடனும் சிதிலமடைந்த இல்லங்களிலும் வசிக்கும் ஈழத்தோழர்களுக்கு... இக்கவிதை

1 comment:

Unknown said...

i like it

Regards
Ramesh
Singapore