skip to main
|
skip to sidebar
Saturday, August 7, 2010
தன்னிலை உணர்தல்
• பிச்சையெடுக்கிறது...மரம் சுமக்கிறது
வித்தை காட்டுகிறது
மண்டியிடுகிறது...ஆசீர்வதிக்கிறது
பழக்க பலதும் செய்கிறது
• சிறு சங்கிலியில் பிணைக்கப்படுகிறது
தார்க்குச்சியால் குத்தப்படுகிறது
அளவுச்சாப்பாடு உருட்டித்தின்கிறது
• தன்னிலை உணர்ந்து ஓர்நாள்
விட்டு விடுதலை ஆகிறது
அடிமைப்படுத்தியவன் சொல்கிறான்,
"அதற்குப் மனநிலை பிறண்டு விட்டது"
-ஜெ.நம்பிராஜன்
Sunday, June 13, 2010
'மெக்காலே' மொழி
பூச்சாண்டி என்றால் என்னவென்றே
தெரிவதில்லை...'மெக்காலே' குழந்தைகளுக்கு
காட்சில்லாவையும் டைனோசரையும்
துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது
சோறு ஊட்ட
-ஜெ.நம்பிராஜன்
Sunday, June 6, 2010
பிள்ளைத்தமிழ்
படிக்கும் புத்தகத்தை
பறித்துக்கொண்டு ஓடுகிறாய்
புத்தகத்தை மறந்து விட்டு உன்னைப்
படிக்கிறேன்...நான்
மாறாத மழலைப்பாடல்களை
மறந்து மறந்து பாடுகிறாய்
மறக்காமல் மீண்டு வருகிறது
எனது பால்யம்
-ஜெ.நம்பிராஜன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
வருகைப்பதிவேடு
என்னைப் பற்றி
ஜெ.நம்பிராஜன்
சொந்த ஊர் திருநெல்வேலி. வேலை மலையாளக் கரையோரம். 'முத்தத்தின் நிறைகுடம்' எனது முதல் கவிதைத் தொகுப்பு.
View my complete profile
கவிதைகள்
▼
10
(3)
▼
Aug
(1)
தன்னிலை உணர்தல்
►
Jun
(2)
'மெக்காலே' மொழி
பிள்ளைத்தமிழ்
►
09
(1)
►
Feb
(1)
►
08
(19)
►
Sep
(1)
►
Aug
(2)
►
Jul
(2)
►
Jun
(2)
►
May
(1)
►
Apr
(3)
►
Mar
(1)
►
Feb
(4)
►
Jan
(3)
►
07
(7)
►
Dec
(2)
►
Nov
(5)
முகவரி
Nambirajan Jayabalan
Create Your Badge
ரயில் பயணங்களில்
கவிப்பேரரசு வைரமுத்து தேர்ந்தெடுத்து குங்குமம் இதழில் வெளியான கவிதை