Sunday, June 6, 2010

பிள்ளைத்தமிழ்

  • படிக்கும் புத்தகத்தை
    பறித்துக்கொண்டு ஓடுகிறாய்
    புத்தகத்தை மறந்து விட்டு உன்னைப்
    படிக்கிறேன்...நான்

  • மாறாத மழலைப்பாடல்களை
    மறந்து மறந்து பாடுகிறாய்
    மறக்காமல் மீண்டு வருகிறது
    எனது பால்யம்
    -ஜெ.நம்பிராஜன்

No comments: