-
எல்லா வீடுகளையும்போன்றுவிடிவதில்லைஇழவு வீட்டின் இரவு
-
தூங்கா விழிகளுடன் இழப்பின் வலியுடன் கூடிய விடியாத இரவு அது
-
பிரிந்த நண்பர்களையும் பேசாத சொந்தங்களையும் அழைத்து வந்து விடுகிறது மிக எளிதாய்...ஒரு மரணம்
-
எல்லோரும் சேர்ந்து வழியனுப்புவர் கண்ணீருடன் இறந்தவரை
-
இவையெல்லாம் வழக்கமான மரியாதை மரிப்பவருக்கு... ஆனால்
-
வழியனுப்ப எவருமில்லை அழும் உறவுகள் எல்லாம் அகதிகளாய் எங்கோ
-
பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருக்கிறது ஒரு தேசம் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு அஞ்சி
-
நித்தம் நூறு சடலங்கள் மொத்தமாய்...கொத்துக் கொத்தாய் சாவின் குறைந்தபட்ச மரியாதையும் அற்று
-
மனிதம் மறந்த மரங்களாய் ரத்தத்தின் மிச்சங்கள் வேடிக்கை பார்க்கும் அண்டை நாட்டில் அமைதியாய் -ஜெ.நம்பிராஜன்

7 comments:
அருமையான கவிதை..
//பிரிந்த நண்பர்களையும்
பேசாத சொந்தங்களையும்
அழைத்து வந்து விடுகிறது
மிக எளிதாய்...ஒரு மரணம்//
நிஜம் !
வலிக்கு வலி கொடுத்துவிட்டிர்கள்
அருமை
நன்றி.. தோழர்கள் ரிஷான், ஹாரிஸ் மற்றும் தமிழ்.. வலி மிகுந்த ஈழ நிகழ்வுகட்கு பின்னர் இப்போது தான் வலைப்பூவிற்கு வர நேர்ந்தது
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment