Sunday, February 8, 2009

இழவு நாடு

  • எல்லா வீடுகளையும்
    போன்றுவிடிவதில்லை
    இழவு வீட்டின் இரவு
  • தூங்கா விழிகளுடன்
    இழப்பின் வலியுடன் கூடிய
    விடியாத இரவு அது
  • பிரிந்த நண்பர்களையும்
    பேசாத சொந்தங்களையும்
    அழைத்து வந்து விடுகிறது
    மிக எளிதாய்...ஒரு மரணம்
  • எல்லோரும் சேர்ந்து
    வழியனுப்புவர் கண்ணீருடன்
    இறந்தவரை
  • இவையெல்லாம் வழக்கமான மரியாதை
    மரிப்பவருக்கு...
    ஆனால்
  • வழியனுப்ப எவருமில்லை
    அழும் உறவுகள் எல்லாம்
    அகதிகளாய் எங்கோ
  • பதுங்கு குழிகளுக்குள்
    பதுங்கியிருக்கிறது
    ஒரு தேசம்
    பாஸ்பரஸ் குண்டுகளுக்கு
    அஞ்சி
  • நித்தம் நூறு சடலங்கள்
    மொத்தமாய்...கொத்துக் கொத்தாய்
    சாவின் குறைந்தபட்ச
    மரியாதையும் அற்று
  • மனிதம் மறந்த மரங்களாய்
    ரத்தத்தின் மிச்சங்கள்
    வேடிக்கை பார்க்கும்
    அண்டை நாட்டில் அமைதியாய்
    -ஜெ.நம்பிராஜன்

4 comments:

M.Rishan Shareef said...

அருமையான கவிதை..

//பிரிந்த நண்பர்களையும்

பேசாத சொந்தங்களையும்

அழைத்து வந்து விடுகிறது

மிக எளிதாய்...ஒரு மரணம்//

நிஜம் !

முஹம்மது ,ஹாரிஸ் said...

வலிக்கு வலி கொடுத்துவிட்டிர்கள்

Learn said...

அருமை

ஜெ.நம்பிராஜன் said...

நன்றி.. தோழர்கள் ரிஷான், ஹாரிஸ் மற்றும் தமிழ்.. வலி மிகுந்த ஈழ நிகழ்வுகட்கு பின்னர் இப்போது தான் வலைப்பூவிற்கு வர நேர்ந்தது